சமூகவலைதளங்களில் தனது பெயரில் மோசடி - முன்னாள் கணவர் மீது கானா பாடகி இசைவாணி புகார்

2 years ago 790

Puthiyathalaimurai-logo

சினிமா

07,Jan 2022 10:14 PM

gana-singer-isaivani-complains-about-ex-husband-cheating-on-her-name-on-social-media

போலி சமூகவலைதளங்கள் மூலம் தமது பெயரில் மோசடி செய்து வரும் முன்னாள் கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பிரபல கானா பாடகி இசைவாணி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

தனது முன்னாள் கணவர் சதீஷ் என்பவர், தமது பெயரைக் கூறி இசை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வதாக மோசடியில் ஈடுபடுவதாகவும், நிகழ்ச்சிகளில் பாட வைப்பதாகக் கூறி பணம் சம்பாதித்து வருவதாகவும் அதில் கூறியுள்ளார். இது குறித்து கேட்டால் சதீஷ் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் இசைவாணி தெரிவித்துள்ளார்.

image

எனவே, தனது புகைப்படத்தை பயன்படுத்தி செயல்பட்டு வரும் சமூக வலைதள கணக்குகளை நீக்குவதோடு, சதீஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்

GO TO TOP

© Copyright Puthiyathalaimurai 2022. All rights reserved

செய்தி மடலுக்கு பதிவு செய்க

Read Entire Article